இலங்கைத் தமிழ் இசைத்துறையில் தனது இசைப் படைப்புகளின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் கந்தப்பு ஜெயந்தன் (Kandappu Jeyanthan) தயாரிப்பில் உருவாகியுள்ள 'பச்சைக்கிளியே' (Pachaikiliye) பாடலின் அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இசை, காதல் மற்றும் நவீன காட்சியமைப்பை இணைக்கும் வகையில் உருவாகியுள்ள இந்தப் பாடல், முழுமையாக கந்தப்பு ஜெயந்தன் YouTube Channel வாயிலாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குவெளியாகவுள்ளது.
தொழில்நுட்பக் குழு
இந்தப் பாடலுக்கு கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து பாடியுள்ளார். பாடல் வரிகளை டி.வி. ராஜேந்திரா (D.V. Rajenthira) எழுதியுள்ளதுடன், ரேப் பகுதியை கடலோன் (Kadaloon) வழங்கியுள்ளார்.
"பச்சைக்கிளி பச்சைக்கிளியே... உன்ன பார்த்தா நெஞ்சமும் பத்திக்கிடுச்சே..."
என்ற வரிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், காதல் உணர்வுகளையும் நவீன இசைத் தாளங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ வெளியீடு
வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவின் மூலம், பாடலின் இசை, காட்சியமைப்பு மற்றும் வண்ணமயமான ஒளிப்பதிவு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழுப் பாடல் மற்றும் இசை வீடியோ, எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு Kandappu Jeyanthan YouTube Channel-இல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
இலங்கைச் சுயாதீன இசைத்துறையில் மேலும் ஒரு புதிய படைப்பாக வெளியாகவுள்ள 'பச்சைக்கிளியே' பாடலுக்கு, Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்