மட்டக்களப்பு மண்ணிலிருந்து புதிய சினிமாப் படைப்பாளிகளின் வருகை எப்போதுமே தமிழ் திரையுலகிற்குப் புதிய உத்வேகத்தைத் தருவதாகும். அந்த வகையில், மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் "நான்கு நண்பர்கள் பிலிம்ஸ்" நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘PROJECT 1 (S1)’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வப் பயணம் தற்பொழுது பூஜையுடன் மிகக் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
குரு மண்வெளியில் ஒலித்த தொடக்க மணி...
இயக்குநர் Y. சுஜீதன் அவர்களின் இயக்கத்தில் விறுவிறுப்பான கதைகளத்தோடு உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை, பிரசித்தி பெற்ற குரு மண்வெளி ஸ்ரீ நாகதம்பிரான் மற்றும் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில் பக்திப் பூர்வமாக நடைபெற்றது. இறைவன் அருள் வேண்டித் தொடங்கப்பட்ட இப்பூஜையைத் தொடர்ந்து, படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புப் பணிகளும் களத்தில் இறங்கி விறுவிறுப்பாகத் துவங்கப்பட்டுள்ளன.
தோள் கொடுக்கும் மூத்த கலைஞர்கள்...
சுயாதீனத் திரைத்துறையின் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவு தரும் வகையில், மட்டக்களப்பு சினிமா உலகின் முக்கிய தூண்களான மூத்த இயக்குநர்கள் முரளிதரன், தேவா அலோசியஸ், கோடீஸ்வரன் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் நேரில் வந்து படக்குழுவினரை வாழ்த்தினர். ஒரு வலுவான கூட்டு முயற்சியாகத் தொடங்கியிருக்கும் ‘PROJECT 1 (S1)’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த சுவாரசியமான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவுள்ளன.
ஈழத்துத் திரையுலகில் தங்களின் புதிய முத்திரையைப் பதிக்கத் தயாராகி வரும் “நான்கு நண்பர்கள் பிலிம்ஸ்” நிறுவனம் மற்றும் இயக்குநர் Y. சுஜீதன் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!









கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்